பெண்ணின் பல பொறுப்புகளில் தாய்மை ஸ்தானம் சிறப்பு வாய்ந்தது. பத்து மாதம் கருவிலே சுமந்து, பிள்ளைப் பேற்றில் மறூஜென்மம் எடுப்பவள் தாய். பிள்ளை முகம் கண்டவுடன் அனைத்தையும் மறந்து
அணைத்துக் கொள்ளும் அன்பின் வடிவம். கருவறைச் சூட்டிலிருந்து வெளி வந்த குழந்தை அன்னையின் கதகதப்பில் தாயுடன் ஒண்டிக் கொள்கிறது. தாயிடம் பால் குடிக்க ,இன்னும் பிணைப்பு இறுக்கமாகிறது.தாயிடந்தான் மனித வாழ்க்கை தொடங்குகிறது.
"அம்மா, உன் விரல்களின் அசைப்பிலே,உன் குரலோசையிலே,உன் பேச்சுக்களிலே அது தெரிந்து கொள்வது எத்தனை எத்தனை.நீ சுட்டிக்காடுவதில்தான் உறவுகள் புரிகின்றன.உன் அன்பு அரவணைப்பில் தன்னம்பிக்கை பெறுகின்றது. வெளியுலகம் எட்டிப் பார்த்ததிலிருந்து உலகைப் புரிந்து கொள்ளும் முதற்பள்ளி நீதான். ஆறு வயதுக்குள் அது வாழும் பிள்ளைப் பருவம்தான் அதன் வாழ்க்கைக்கு அஸ்திவாரம். உன் கடமை தொடர்கின்றது. உன் குழந்தை நன்றாகக் கல்வி கற்று உறுதியான ஓர் இடத்தைப் பெற நீ பாடுபடுகின்றாய். அவனுக்கு நல்லதொரு துணை அமைவதில் அக்கறை காட்டுகின்றாய்.அவன் ஒருத்தியின் கை பிடிக்கும் பொழுது உன் கண்களில் நீர் ததும்புகிறதே, ஏன் அம்மா, உன்படைப்பிற்கு ஒருபாதுகாப்பைத் தேடிக் கொடுத்ததில் மகிழ்ச்சி நிறைந்த மன நிறைவின் வெளிப்பாடா? ஈன்ற பொழுதினும் மகனைச் சான்றோன் ஆக்குவதில் நீ பட்டபாடுகள் எத்தனை, எத்தனையம்மா. அதனால்தான் "தாயினும் சிறந்த கோயிலில்லை"என்ற புகழ்ப் பாட்டுக்குச் சொந்தக்காரியாகி விட்டாய்.'
Submit New Radio/FM to akilan4@gmail.com
FOR MORE INFORMATION ABOUT AKILAN
PRODUCE BY EELAM BOYS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment